Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு இனிப்புகள் வழங்கல்

நவம்பர் 13, 2023 01:18

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ராசிபுரம் குற்றவியல் வழக்கங்கள் சங்கம நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள்  ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு  தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு, மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து புதிய நிர்வாகிகளை கௌரவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காமராஜ், மற்றும் ராசிபுரம் குற்றவியல் வழக்கங்கள் சங்க தலைவர் வாசுதேவன், ஆகியோர் தலைமை வகித்தனர்.

பொதுச் செயலாளர் தங்கதுரை மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் கொடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

தலைப்புச்செய்திகள்